Sunday, June 28, 2020

சொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து

தமிழ் இணைய இதழ்களில் சொல்வனம் நெடிய பாரம்பரியம் கொண்டது. ஒரு இணைய இதழ் 225 இதழ்களாக தொடர்ந்து நடத்தி வருவது சாதாரணம் அல்ல. இடைக்காலத்தில் சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழில் முனைப்புடன் இருக்கும் ஆகப்பழமையான இணைய இதழ் என சொல்வனத்தையே சொல்ல முடியும். சொல்வனத்திற்கு சமூக ஊடகத்தில் பெரிய இருப்பு இல்லை என்பதே இன்றைய நிதர்சனம். பதாகைக்கும் இந்த சிக்கல் உண்டு. இன்று இணைய இதழுக்கு சமூக ஊடக இருப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது. தமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை,  வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது. எழுத்தாளர்களும் இயல்பாக அவற்றை நாடி செல்வார்கள். இப்போது இணைய இதழ்கள் உருமாற்றம் அடைய துவங்கியுள்ளன. இணைய இதழ் என்பது சிற்றிதழுக்கு நெருக்கமானவை தான். ஒரு மனிதர் அல்லது ஒரு சிறிய குழுவின் தனிப்பட்ட ஊக்கத்தினால் மட்டுமே இயங்குவது. சொல்வனத்தில் ரவிசங்கர் மற்றும் வெகு சில நண்பர்கள் முழு தீவிரத்துடன் இதை நடத்தி வருகிறார்கள். சொல்வனம் தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்கிறது.எனது அம்புப்படுக்கை தொகுப்பின் கதைகள் முழுக்க சொல்வனம், பதாகை இதழ்களில் வெளிவந்தவை. இப்போது நான் அவற்றில் அதிகம் எழுதவில்லை என்றாலும் கூட இவ்விதழ்களில் உருவாகி வந்தவன் என்றே என்னை எண்ணிக் கொள்வேன். 

நேற்று சொல்வனம் 225 ஆவது இதழ் ரொபர்டோ போலன்யோ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. முப்பதிற்கும் மேற்பட்ட கட்டுரையுடன். லத்தீன் அமெரிக்காவில் கூட இத்தனை கட்டுரைகளுடன் அவருக்கு ஒரு சிறப்பிதழ் வந்திருக்குமா என தெரியவில்லை. கல்குதிரை சில ஆண்டுகளுக்கு முன் மார்க்குவஸ் சிறப்பிதழ் வெளியிட்டு அதை அவருக்கே அனுப்பிவைத்ததாக சொல்வார்கள். சொல்வனம் முன்னர் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், அ. முத்துலிங்கம் ஆகியோருக்கு சிறப்பிதழ்கள் கொண்டுவந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது. ஆனால் அவற்றில் கூட இந்த எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்ததாக எனக்கு நினைவில்லை. 

நண்பர் நம்பி சிறப்பு ஆசிரியராக இருந்து இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறார். நம்பியின் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழில் பல முக்கியமான அயல் எழுத்தாளார்களை அறிமுகம் செய்தவர். நானறிந்தவரையில் நம்பி, கணேஷ்ராம், சித்துராஜ் பொன்ராஜ், ரா.கிரிதரன், வாசுதேவன், வே.நி.சூர்யா ஆகியோர் பரவலாக வேற்று மொழி இலக்கியவாதிகளை இங்கு அறிமுகம் செய்து வருகிறார்கள்.

கல்குதிரையில் டேன்ஸ் கார்ட் கதையை மொழியாக்கம் செய்ததன் வழியாக தமிழுக்கு போலன்யோவை முதன்முறையாக கொண்டு வந்த நண்பன் சித்திரனின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. கவிஞர் சமயவேல், அம்பை, சித்துராஜ், சுரேஷ் பிரதீப், ரா.கிரிதரன், நம்பி, வேணு தயாநிதி, கோகுல் பிரசாத்  என மதிப்பு வைத்திருக்கும் பலரும் பங்களிப்பு ஆற்றியுள்ளார்கள். 

போலன்யோ சிறப்பிதழில் என் பங்களிப்பாக ஒரு கட்டுரையும், நரோபா எழுதிய ஒரு கதையும் இடம்பெற்றிருக்கிறது. தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் உணர்கிறேன். இலக்கிய லட்சியவாதம்  என்பதைத்தவிர இம்மாதிரியான இதழ்களை தொடர்ந்து நடத்திவர வேறு எதுவும் காரணம் இருக்கப்போவதில்லை. அது அளிக்கும் போதை, சிறிய அங்கீகாரம், மென்மேலும் இயங்க செய்யும் விசையாகும். நம்பிக்கும், சொல்வனம் நண்பர்களுக்கும் இந்த இதழுக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பதாகை எழுத்தாளர் சிறப்பிதழ்களை தூசு தட்டும் எண்ணத்தை, ஊக்கத்தை அளிக்கிறது. 

மானுடத்தை துப்பறிபவன் |(நான் எழுதிய கட்டுரை)

கொஞ்சம் சிறுசா  (நரோபாவைன் பழுவேட்டையர் கதை போலன்யோவின் தாக்கத்தில்)

கீழே சொல்வனம் ஆசிரியர் ரவிசங்கர் அவர்களின் கடிதம் 

அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது.
இந்த இதழ் கிட்டும் வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழில் படிக்கக் கிட்டுவனவற்றின் பட்டியல் கீழே:
Especially on the Bolano Special… - சிறப்புப் பதிப்பாசிரியர்
நகரத்தில் இப்போதும் இரவு – சித்துராஜ் பொன்ராஜ்
என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு – ரொபெர்டோ பொலான்யோ (தமிழாக்கம்: அம்பை)

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்  - நம்பி

தாவீதுகளின் சங்கீதம்பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார் – கோகுல் பிரசாத்

மானுடத்தைத் துப்பறிபவன் – சுனில் கிருஷ்ணன்

2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல் – சுரேஷ் பிரதீப்

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்டோ பொலான்யோவின் Amulet

ரா. கிரிதரன்

தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல் - சித்ரன்

உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – – ராபர்டோ பொலோன்யோவின் கவிதைகள் - வேணுகோபால் தயாநிதி

கவிதைக்களத்தில் விளையாட்டாக -ஹூஸ்டன் சிவா

ரொபெர்டோ பொலான்யோவின் ஆறு கவிதைகள் -வேணுகோபால் தயாநிதி

மர்மமான அந்தச் சிலெ நாட்டான் – வெண்டி லெஸ்ஸர் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

ரொபெர்டோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம் – பானுமதி ந.

(தமிழாக்கம்: மைத்ரேயன்)
கொஞ்சம் சிறுசா – நரோபா- சிறுகதை
சென்சினி – ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: எம்.நரேந்திரன்)
ஜெயில் பறவைகள்  - ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)
கிளாராரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)
வில்லியம் பர்ன்ஸ் -ரொபெர்டோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்)
துப்பறிவாளர்கள் – முத்து காளிமுத்து
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு -பாஸ்டன் பாலா                                                       ரொபெர்டொ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள் – (தமிழாக்கம்: ஆகாசஜன்)

ரொபெர்டொ பொலான்யோ – 2666: மேடை நாடகம் – பதிப்புக் குழு


தவிர: காணொளி – பொலான்யோவின் ஒரு பேட்டி.

இதழைப் படித்தபின், உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழே எழுத வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதல்லாமல், மின்னஞ்சல் வழி தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். படைப்புகள் வோர்ட் அல்லது சமமான மென்பொருளில் வடிவமைக்கப்பட்டு docx போன்ற கோப்பாக அனுப்பப்பட வேண்டும். பிடிஎஃப் கோப்புகளை அனுப்பலாகாது.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்
சொல்வனம் படைப்புக் குழு




No comments:

Post a Comment