Tuesday, April 7, 2020

1000 மணிநேர வாசிப்பு- அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்


அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை ...
அன்புள்ள சுனீல்,
  நலமா? நாங்கள் நலமே.

ஒரு சிறிய நற்செய்தி. நான் நேற்றுடன் 1000 மணிநேர வாசிப்பு சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சியும், உற்சாகமும் என்னை நிறைத்தது. ஏதோ சாதனை போலவே உணர்ந்தேன். என்னை நினைத்து பெருமிதம் கொண்ட மிக ச் சில தருணங்களில் ஒன்று. 
இதற்கான முழுமுதல் காரணம் நீங்கள். சென்ற வருடம் இச்சவாலை தொடங்கி வைத்து ஏராளமான ஆட்களை இதில் பங்குபெற செய்திருக்கிறீர்கள். 
    இச்சவால் இல்லாமலும் வாசிப்பவள் தான் நான் என்றாலும் இத்தனை மணி நேரத்தை இவ்வளவு முனைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் வாசித்திருக்க முடியாது என்றே கருதுகிறேன். உதாரணமாக இதற்குமுந்தைய  வருடம் நான் வாசித்த புத்தகங்கள் சுமார் 50-55. இந்த வருடம் அது இரு மடங்காகி இருக்கிறது.
  
 இந்த மாதிரி  சிறு சிறு இலக்குகள்தான்  வாழ்க்கையை மேலும் சுவாரஸ்யபடுத்துகின்றன. ஒரு சிறிய இலக்கை எய்தும்போது நிறைவு. பிறகு அடுத்த இலக்கு.இது ஒரு காந்திய வழியும் கூட. நம் சலிப்புற்ற அன்றாடத்தை சுவையூட்டுபவை இவையே என  நினைக்கிறேன்.  இந்த மடைமாற்றத்தை ஏற்படுத்தி தந்த உங்களுக்கு என் நன்றி.
    வெளிநாடு [3 பயணங்கள்] , சொந்த ஊர் சென்ற நாட்கள் தவிர பிற அனைத்து நாட்களும் வாசித்திருக்கிறேன்.

      இப்போது தற்சமயம் இதிலிருந்து விலகுகிறேன். பிறகு அடுத்த சவாலில் இணைந்து கொள்கிறேன். சில தனிப்பட்ட முயற்சிகள் செய்யப் போகிறேன். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களுக்கு அறிவிப்பேன்.

    சாந்தமூர்த்தி சார்  இரண்டாயிரத்தை நெருங்கப் போகிறார்.  ஒரு அசுர  சாதனை. அவருக்கு என் வணக்கமும் வாழ்த்தும். 

    ஓட்டத்தில் பங்கு பெறும் பிற அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் அன்பும் , வாழ்த்தும்.

வாசித்த புத்தக பட்டியல் அந்த அட்டவணையிலேயே இருக்கிறது.வேண்டுமென்றால் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன், 

அருண்மொழி நங்கை.

அன்புள்ள அருணா அக்கா, 

ஏப்ரல் பதினாலு வந்தால் சவால் தொடங்கி ஒரு வருடம் நிறைவுறுகிறது. நான் இதை தொடங்கிய போது சராசரியாக நம்மால் நாளுக்கு மூன்று மணிநேரம் வாசிக்க முடிந்தால் ஒரு வருடத்தில் 1000 மணிநேரத்தை கடக்க முடியும் என நம்பினேன். உங்கள் விஷயத்தில் அது சரியாகவே நடந்திருக்கிறது. அதற்கு முன்னரே வெற்றிகரமாக இந்த சவாலில் வென்றுள்ளீர்கள். சாந்தமூர்த்தி அவர்களுக்கு பின்னர் இரண்டாவாதாக நிறைவு செய்திருப்பவர் நீங்களே. அதற்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இதை தொடங்கிய நான் இன்னும் ஐநூறு மணிநேரங்களை தொடவில்லை. நண்பர்கள் சுரேஷ் பிரதீப், லாவண்யா, பாலசுப்பிரமணியன், சரவணக்குமார், ராதா மற்றும் கமலதேவி  ஆகியோர் ஐநூறை கடந்து விட்டிருக்கிறார்கள். அதை விட சாந்தமூர்த்தி ஒரு ஆயிரம் முடித்து இரண்டாவது ஆயிரத்தை நிறைவு செய்து, சின்ன பயக்கலா ஆருகிட்ட என மார்தட்டி கொண்டிருக்கிறார்.  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பலனளித்திருக்கும் என நம்புகிறேன். தொடக்க நிலையில் விட்டவர்களுக்கு தங்கள் வாசிப்பின் குவியமின்மையை காட்டியிருக்கும். பலருக்கு தங்கள் ஆற்றல் மற்றும் கவனம் கூடியிருக்கிருப்பதை உணர முடியும். ஒரு பழக்கமாக வெவ்வேறு சூழலுக்கு இடையே வாசிக்க உதவியிருக்க கூடும். ஏதோ ஒருவகையில் எல்லோருக்கும் இது உதவியிருக்கும் என நம்புகிறேன். இந்த யோசனை என் வழியாக விதைக்கப்பட்டது என்பதில் சிறிய பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். 
அடுத்து நீங்கள் தொடங்க விருக்கும் பணிக்கும் வாழ்த்துக்கள். 

சாந்தமூர்த்தி அவர்கள் தன வலைப்பூவில் அருண்மொழி அக்காவை  வாழ்த்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இந்த போட்டியின் ஒரு சம்மரி இருக்கிறது. நண்பர்கள் வாசிக்க வேண்டும். 

கீழே அருண்மொழி நங்கை வாசித்த புத்தகங்களின் பட்டியல் உள்ளது. மொத்தம் நூற்றி பதிமூன்று நூல்கள். சில ஆங்கில நூல்கள், கணிசமான மொழியாக்க கிளாசிக்குகள், மறுவாசிப்புகள், வளரும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், தமிழ் கிளாசிக்குகள் என பரந்துபட்ட வகையில் அமைந்திருக்கிறது. 

இந்த கொரோனா காலத்தில் நண்பர்கள் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஆக்கப்பூர்வமாக வாசிக்க வேண்டும் என கோருகிறேன். 


1.கான்சாகிப்-சிறுகதைதொகுப்பு-நாஞ்சில் நாடன்
2.பஷீர் நாவல்கள்- மறுவாசிப்பு
3.எழுதாப்பயணம்-லக்‌ஷ்மி பாலக்ருஷ்ணன்
4.புனைவும் நினைவும்-சமயவேல்
5.மண்ணும் மனிதரும்-சிவராம காரந்த்-மறு வாசிப்பு
6.கோரா- டாகூர்
7.என் சரித்திரம்-உ.வே.சா
8.வெளிச்சமும் வெயிலும்-சிவா க்ரிஷ்ணமூர்த்தி
9.பிராது- கண்மணி குணசேகரன்
10. ஒற்றன் -அசோகமித்ரன் மறுவாசிப்பு
11.சுபிட்ச முருகன் -சரவணன் சந்திரன்
12.பச்சை நரம்பு-அனோஜன் பாலக்ரிஷ்ணன்
13.கரைந்த நிழல்கள்-அசோகமித்ரன் -மறு வாசிப்பு
14.18 வது அட்சக்கோடு-அசோகமித்ரன்
15.உருமால் கட்டு-சு. வேணுகோபால்
16.புதிய ஜார்- சாம்ராஜ்
17.சீர்மை-அர்விந்த் கருணாகரன் மறு வாசிப்பு
18.பிரபல கொலைவழக்குகள்-சொக்கலிங்கம்
19.எனது தேசத்தை மீளப்பெறுகிறேன் -ஆப்பிரிக்க உலக சிறுகதைகள்
20.எஞ்சும் சொற்கள்-சுரேஷ் ப்ரதீப்
21.வண்ண கழுத்து-தன்கோபால் முகர்ஜி
22.நிழலின் தனிமை-தேவி பாரதி
23.யுகாந்தா- ஐராவதி கார்வே
24.குவெம்புவின் சிறுகதைகள்-கன்னட சிறுகதைகள்
25. outlaw- by roy maxham
26.வனவாசி-விபூதிபூஷன்
27. அக்னி நதி- குல் அதுல் ஐன் ஹைதர் மறுவாசிப்பு
28. தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங்
29.பௌத்தத் தத்துவ இயல் -ராகுல் சாங்கிருத்யாயன்
30.இன்று- அசோகமித்ரன்
31.இனி நான் உறங்கட்டும்- பி.கே.பாலகிருஷ்னன்
32.பங்கர்வாடி-வெங்கடேஷ் மாட்கூல்கர்
33.கலாதீபம் லொட்ஜ்- வாசு முருகவேல்
34.கன்னி- ஃப்ரான்சிஸ் கிருபா
35.ஒரு குடும்பம் சிதைகிறது- எஸ்.எல். பைரப்பா
36.LIFE ON EARTH- DAVID ATTENBOROUGH
37.புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை- ஆர்தர் லில்லி
38.Sidhartha- Herman Hesse
39.இரண்டாம் இடம்-எம்.டி.வாசுதேவன் நாயர்
40. மானசரோவர்- அசோகமித்ரன்
41.நரசிம்மராவ்-இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி-வினய் சீதாபதி
42.காந்தி வாழ்க்கை-லூயி ஃபிஷர்
43.Fontamara-Ignazio silone
44.பாரிஸுக்கு போ- ஜெயகாந்தன்
45.தீயின் எடை- ஜெயமோகன் -30 அத்யாயங்கள்
46.அவரவர் பாடு- க.நா.சு
47.புனலும் மணலும்-ஆ.மாதவன்
48. மனோதிடம்- பன்னாலால் படேல்[ குஜராத்தி நாவல்]
49.கசாக்கின் இதிகாசம்-ஓ.வி. விஜயன் தமிழில்-யூமா.வாசுகி
50.ஒற்றை வைக்கோல் புரட்சி-மசானபு ஃபுகுவோகா
51.நீலகண்ட பறவையைத்தேடி-அதீன் பந்தோபாத்யாய-வங்க நாவல்- மறு வாசிப்பு
52.யுகாதி -கன்னட சிறுகதைகள்-நஞ்சுண்டன்
53. வேங்கைச் சவாரி- விவேக் ஷன்பாக்
54. யாமம்- எஸ். ராமகிருஷ்ணன்
55.சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
56.பயணக்கதை-யுவன் சந்திரசேகர்
57.சிலுவைராஜ் சரித்திரம்-ராஜ் கௌதமன்
58.குள்ள சித்தன்சரித்திரம்-யுவன் சந்திரசேகர்-மறு வாசிப்பு
59.நீல கண்டம்-சுனில் கிருஷ்ணன்
60..ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை-ஸொராண்டினோ-தமிழில் எம்.எஸ்
61. நிலாக்கள் தூர தூரமாக-பாரத தேவி
62.தக்கர் கொள்ளையர்கள்-வரதராசன்
63. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்-மாரி செல்வராஜ்
64. ஏற்கனவே-சிறுகதை தொகுப்பு-யுவன் சந்திரசேகர்
65. நான்,சரவணன்வித்யா-லிவிங் ஸ்மைல் வித்யா
66.கானுறை வேங்கை- கே. உல்லாஸ் கரந்த்
67. தென்னாப்பிரிக்காவில் காந்தி-ராம சந்திரகுஹா
68.இன்றைய காந்திகள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி
69.பேய்ச்சி- நாவல்- ம.நவீன்
70.அங்கே இப்ப என்ன நேரம்- அ.முத்துலிங்கம். மறுவாசிப்பு
71. எனது இந்தியா- ஜிம் கார்பெட்- தமிழில் யுவன் சந்திரசேகர்
72. அனல் ஹக்- பஷீர்- தமிழில் யூசுப்
73.மீஸான் கற்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா-தமிழில் யூசுப்
74. ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்
75. சுமித்ரா-கல்பற்றா நாராயணன்
76.கஸ்தூரி திலகம்-பரணீதரன்
77.போயாக்- ம. நவீன்
78..ராஜீவ் கொலைவழக்கு- ரகோத்தமன்
79.சதுரங்க குதிரைகள்-ஹிந்தி நாவல்- கிரிராஜ் கிஷோர்
80.ஒளி- சுசித்ரா
81.கூண்டுக்குள் பெண்கள்-விலாஸ் சராங்-சீனிவாசன்
82. மண்டை ஓடி- ம.நவீன்
83. நீல கண்டம்-சுனீல் கிருஷ்ணன் -மறு வாசிப்பு
84.களிற்றியானை நிரை-ஜெயமோகன் -25 அத்யாயங்கள்
85.கொல்லப்படுவதில்லை- வங்க நாவல்-மைத்ரேயி தேவி
86.காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை- ரா. கிரிதரன்
87.எழுதித் தீராப் பக்கங்கள்- செல்வம் அருளானந்தம்
88. பிறகு- நாவல்- பூமணி
89. வெக்கை- நாவல்- பூமணி
90.சொற்களில் சுழலும் உலகம்- செல்வம் அருளானந்தம்
91.அகதி- சா. ராம்குமார்
92.பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ- அ.கா. பெருமாள்
93.மனை மாட்சி-எம்.கோபால க்ரிஷ்ணன்

94.வெளியேற்றம்-யுவன் சந்திரசேகர்

95. இறுதி யாத்திரை- எம்.டி. வாசுதேவன் நாயர்
96.பிரேம்சந்த் சிறுகதைகள்- தமிழாக்கம் சௌரி
97. கொங்கு தேர் வாழ்க்கை- நாஞ்சில் நாடன்

98. Mirror images- novel by Linda grey sexton

99.விழித்திருப்பவனின் கனவு- கே.என். செந்தில்
100.உப்பு வேலி-ராய் மாக்ஸம்- தமிழில் சிரில் அலெக்ஸ்
101.பதிமூணாவது மையவாடி- நாவல்- சோ. தர்மன்

102.தஞ்சை சிறுகதை பட்டறைக்கான சிறுகதைகள்

103.அசோகமித்திரன் சிறுகதைகள்-தொகுதி 1
104. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
105. வானமே எல்லை-கேப்டன் கோபிநாத்
106. கங்கை எங்கே போகிறாள்- ஜெயகாந்தன்
107.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்- ஜெயகாந்தன்

108.ஆங்காரம்-நாவல்- ஏக்நாத்
109.திருநங்கையர்-சமூக வரைவியல்- பத்மபாரதி
110.சோளகர் தொட்டி- பாலமுருகன் -நாவல்

111.இருபது வருஷங்கள்- நாவல்-எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
112.ஜெயகாந்தன் குறுநாவல்கள்- தொகுதி ஒன்று

113.நான் பூலான் தேவி- மரிய தெரஸ்கூன், பால் ராம்பாலி


2 comments:

  1. நன்றி,சுநீல்! நன்றி,அருண்மொழி!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அருணா அக்கா, புதிய முயற்சிகள் வெற்றி பெறவும் ,1000 மணி நேர வாசிப்பை தூண்டிய சுநீல் கிருஷ்ணன்,
    இன்னும் 1000 மணி நேர வாசிப்பில் உள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    ஷாஹுல் ஹமீது.

    ReplyDelete